Home One Line P2 அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெறுவதை நிறுத்த வேண்டாம்- உலக சுகாதார நிறுவனம்

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெறுவதை நிறுத்த வேண்டாம்- உலக சுகாதார நிறுவனம்

452
0
SHARE
Ad

ஜெனீவா: கொவிட் தடுப்பூசிகள் பெறுவதை இடைநிறுத்தம் செய்ய வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளது. பல முக்கிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பெறுவதை நிறுத்தியுள்ளன.

இந்த தடுப்பூசி காரணமாக இரத்த உறைவு ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அது கூறியது.

ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகியவை, மேலும் சில நாடுகளுடன் இணைந்து இந்த தடுப்பூசிகளை நிறுத்தி உள்ளன.

#TamilSchoolmychoice

ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (ஈ.எம்.ஏ) இந்த தடுப்பூசிகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் இரத்தக் கட்டிகள் உருவாகும் பல சம்பவங்கள் ஐரோப்பாவில் உள்ளன.

இருப்பினும், இவை பொதுவாக பொது மக்களிடையே பதிவாகும் இரத்த உறைவு சம்பவங்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்தில் சுமார் 17 மில்லியன் மக்கள் தடுப்பூசியின் அளவைப் பெற்றுள்ளனர். கடந்த வார நிலவரப்படி 40- க்கும் குறைவான இரத்தக் கட்டிகள் பதிவாகியுள்ளதாக அஸ்ட்ராசெனெகா தெரிவித்துள்ளது.