Home One Line P1 அம்னோ-பிகேஆர்: மாலை 4:30 மணிக்கு அன்வார் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்

அம்னோ-பிகேஆர்: மாலை 4:30 மணிக்கு அன்வார் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்

491
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலுக்கான ஒத்துழைப்பு குறித்து தனது கட்சிக்கும் அம்னோவிற்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 4:30 மணிக்கு அன்வார் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதாக அறிவித்துள்ளார். அங்கு அவர் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு கட்சிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக மலேசியாகினியிடம் கட்சி வட்டாரம் உறுதிப்படுத்தியது.

#TamilSchoolmychoice

பிரதமர் மொகிதின் யாசினின் பெர்சாத்து கட்சி மீது இரு கட்சிகளும் அதிருப்தி அடைந்துள்ளன என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. அண்மையில் உத்துசான் மலேசியாவுக்கு அளித்த பேட்டியில், அன்வார் பிகேஆர்-அம்னோ ஒத்துழைப்பு நாட்டை அழிவிலிருந்து காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

இரு கட்சிகளுக்கிடையில் தொடர்ச்சியான அதிகாரப்பூர்வமற்ற கூட்டங்கள் நல்லமுறையில் நடந்ததாகவும், இரு கட்சிகளும் பரஸ்பர புரிந்துணர்வை அடைய முடிந்தால், அது நல்ல கொள்கைகளில் இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஒத்துழைப்பின் நோக்கம் ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதே ஆகும்.

தேசிய பொருளாதாரத்தை மீட்பதிலும் தேசிய கூட்டணி அரசாங்கத்தை நிராகரிப்பதிலும் உறுதியாக நின்ற பல அம்னோ தலைவர்களை அவர் பாராட்டினார்.