பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள உண்மையான காரணத்தை அன்வார் மறுப்பதாகத் தெரிகிறது என்று அவர் கூறினார்.
“குற்றச்சாட்டு ஒரு நிர்பந்தத்தில் செய்யப்பட்டதாக எனக்கு தோன்றுகிறது. மேலும், (அன்வார்) தனது பாதையை இழந்துவிட்டார், ஏனென்றால் இன்னும் தனக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறுகிறார். ஆனால், அது உண்மை இல்லை” என்று சுரைடா கூறினார்.
கொவிட் -19 பாதிப்பைக் கையாள்வதில் தேசிய கூட்டாணி வெற்றி பெற்றது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவு தர காரணமாக அமைந்தது என்று அவர் தெரிவித்தார்.