Home One Line P1 நெடுஞ்சாலை கட்டுமான விபத்து: மூன்றாவது சடலம் மீட்கப்பட்டது

நெடுஞ்சாலை கட்டுமான விபத்து: மூன்றாவது சடலம் மீட்கப்பட்டது

726
0
SHARE
Ad

கோலாலம்பூர்: திங்களன்று சுங்கை பெசி-உலு கிளாங் நெடுஞ்சாலை (எஸ்யூகெஈ) கட்டுமான இடத்தில் நடந்த விபத்தில் கொல்லப்பட்ட மூன்றாவது தொழிலாளியின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டது.

அதிகாலை 2.15 மணிக்கு மீட்புப் பணிகள் தொடங்கிய அரை மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளிலிருந்து சடலம் மீட்கப்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

சடலம் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

செராஸ், புஞ்சாக் பன்யன் அடுக்குமாடி குடியிருப்பு அருகே உள்ள கட்டுமான இடத்தில் திங்கட்கிழமை காலை நடந்த இந்த சம்பவத்தில், இருவர் சம்பவ இடத்திலேயே மாண்டனர். மரணமுற்ற மூவருமே சீன குடிமக்களாவர்.