Home One Line P2 ஐ.நா அமைதி காக்கும் படையினருக்கு தடுப்பூசிகளை இந்தியா பரிசாக வழங்குகிறது

ஐ.நா அமைதி காக்கும் படையினருக்கு தடுப்பூசிகளை இந்தியா பரிசாக வழங்குகிறது

524
0
SHARE
Ad

புது டில்லி: 200,000 கொவிட் -19 தடுப்பூசிகளை இந்தியா மார்ச் 27 அன்று ஐ.நா அமைதி காக்கும் படையினருக்கு அனுப்பும் என்று தெரிவித்துள்ளது.

ஐ.நா அமைதி காக்கும் படையினருக்கு இந்தியா 200,000 கொவிட் -19 தடுப்பூசிகளை பரிசாக வழங்குவதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பிப்ரவரியில் அறிவித்திருந்தார்.

“இத்தகைய கடினமான சூழ்நிலைகளில் செயல்படும் ஐ.நா அமைதி காக்கும் படையினரை மனதில் வைத்து, அவர்களுக்கு 200,000 தடுப்பூசிகளை இன்று அறிவிக்க விரும்புகிறோம்,” என்று ஜெய்சங்கர் ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் உரையாற்றியபோது கூறினார்.

#TamilSchoolmychoice

மொத்தம் 121 நாடுகள் ஐ.நா அமைதிகாக்கும் பணிகளுக்கு பங்களித்து வருகின்றன. அமைதி காக்கும் பணிகளுக்கு பங்களிக்கும் நாடுகளில் பாரம்பரியமாக இந்தியா அதிகமானவர்களை இந்த பணிக்காக அனுப்பியுள்ளது.