Home One Line P1 தவறான வழியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதை நிறுத்த வேண்டும்

தவறான வழியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதை நிறுத்த வேண்டும்

439
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்துவில் பெரும்பான்மையைப் பெருக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற அச்சுறுத்தல்கள் மற்றும் தவறான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் கேட்டுக் கொண்டார்.

இன்று அம்னோவின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய முகமட், மலேசியாவின் அரசியல் நிலமையை சரிசெய்ய வேண்டும் என்று கூறினார்.

“அதிகாரத்தில் இருக்க அவசரநிலையைப் பயன்படுத்துவதற்கான நிலைகள் இல்லாமல். நம் அரசியல் மற்றும் ஜனநாயகத்தின் மதிப்பை பாலாக்கும் ஒழுக்கக்கேடான அரசியல் சதுரங்க விளையாட்டுக்கள் எதுவும் இல்லாமல், ” என்று அவர் கட்சியின் மகளிர், புத்ரி மற்றும் இளைஞர் பிரிவுகளின் கூட்டத்தை தொடக்கி வைத்த போது கூறினார்.