Home One Line P1 நஜிப் வழக்கறிஞர்கள் வார்த்தைகளில் கண்ணியம் தேவை, நீதிமன்றம் எச்சரிக்கை!

நஜிப் வழக்கறிஞர்கள் வார்த்தைகளில் கண்ணியம் தேவை, நீதிமன்றம் எச்சரிக்கை!

835
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமருக்கு தண்டனை விதித்த உயர்நீதிமன்ற நீதிபதியை விமர்சிப்பதில் தகுந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்குமாறு நஜிப் ரசாக் தலைமை வழக்கறிஞர் ஷாபி அப்துல்லாவை நீதிமன்றம் இன்று எச்சரித்தது.

வாதிடும்போது அதிக கண்ணியமான மொழியைப் பயன்படுத்துமாறு முகமட் ஷாபி அப்துல்லாவை மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் குழு தலைமை நீதிபதி அப்துல் கரீம் அப்துல் ஜலீல் உத்தரவிட்டார்.

“நீதிபதி எங்கே தவறு செய்தார் என்பதை விளக்க தயவுசெய்து கண்ணியமான மொழியைப் பயன்படுத்தவும்.
தகாத சொற்றொடர்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை,” என்று நீதிபதி கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, தனது மேல்முறையீட்டு வாதத்தை முன்வைத்தபோது, ​​கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலியின் தீர்ப்பை ஷாபி கேள்வி எழுப்பியிருந்தார்.

எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 42 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட ஊழல், நம்பிக்கை மோசடி மற்றும் அதிகார அத்துமீறல் ஆகிய ஏழு குற்றச்சாட்டுகளுக்கும் நஜிப் குற்றவாளி என்று முகமட் நஸ்லான் தீர்ப்பளித்திருந்தார்.

பின்னர் நஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.