Home One Line P1 சரவாக்: தேர்தல் போது தேசிய கூட்டணி உதவிக்கு நன்றி, ஆனால்…..

சரவாக்: தேர்தல் போது தேசிய கூட்டணி உதவிக்கு நன்றி, ஆனால்…..

864
0
SHARE
Ad

கூச்சிங்: வரவிருக்கும் சரவாக் மாநிலத் தேர்தலில் காபுங்கான் பார்ட்டி சரவாக் (ஜி.பி.எஸ்) – க்கு உதவ உறுதியளித்த தேசிய கூட்டணி உச்சமன்றக் குழுவுக்கு சரவாக் முதலமைச்சர் அபாங் ஜோஹாரி ஓபெங் நன்றி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஆளும் கூட்டணி அவர்களுக்கு எதிராக இருந்தால் மீண்டும் போராட இருப்பதாக அவர் கூறினார்.

“எங்களுக்கு உதவ விரும்பினால், நாங்கள் ‘நன்றி’ கூறுகிறோம், ஆனால் எங்களுக்கு எதிராக செயல்பட விரும்பினால், நாங்கள் மீண்டும் போராடுவோம். இது மிகவும் எளிது, ” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

அடுத்த மாநில தேர்தல்களில் கட்சிக்கு உதவ ஒவ்வொரு மட்டத்திலும் அதன் இயந்திரங்களை அணிதிரட்டுமாறு தேசிய கூட்டணி உச்சமன்றக்குழுவின் சமீபத்திய அறிக்கைக்கு அவர் பதிலளித்தார்.