Home One Line P1 சாஹிட்- அன்வார் குரல் பதிவு 100 விழுக்காடு உண்மை!

சாஹிட்- அன்வார் குரல் பதிவு 100 விழுக்காடு உண்மை!

418
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆகியோரின் மறுப்புகள் இருந்தபோதிலும், முன்னாள் அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா, அவர்கள் சம்பந்தப்பட்ட குரல் பதிவு உண்மையானது என்று 100 விழுக்காடு உறுதியாக இருப்பதாக கூறினார்.

நேற்றிரவு தான் 10 முறை அக்குரல் பதிவைக் கேட்டதாகவும், சாஹிட் மற்றும் அன்வார் இருவரையும் நன்கு அறிந்திருப்பதால், அவர் மிகவும் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.

“இது குரல் ஆள்மாறாட்டம் செய்பவர்களாக இருந்தால், எனக்குத் தெரிந்திருக்கும். நேர்மையாக, அது அவர்கள்தான் என்று என்னால் சொல்ல முடியும். நேற்றிரவு நான் 10 முறை அதைக் கேட்டேன். அது அவர்களின் குரல்கள் என்று நான் 100 விழுக்காடு நம்புகிறேன், அது உருவாக்கப்படவில்லை,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், குரல் பதிவு போலியானது என்று சாஹிட் மற்றும் அன்வார் இருவரும் கூறியுள்ளதால், அனுவார் இருவரையும் ஒரு மசூதியில் தாங்கள் குற்றமற்றவர்கள் அல்ல என்று சத்தியம் செய்ய வலியுறுத்தினார்.

அம்னோ பொதுப் பேரவை முடிவடைந்த உடனேயே இது நடந்ததாகக் கூறப்படுவதால், உரையாடல் உள்ளடக்கங்கள் தமக்கு மிகவும் ஏமாற்றமளிப்பதாக அனுவார் கூறினார்.