Home One Line P1 சரவாக்: கொவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பு கவலை அளிக்கிறது!

சரவாக்: கொவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பு கவலை அளிக்கிறது!

465
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து சரவாக்கில் கொவிட் -19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலை அளிக்கிறது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த அதிகரிப்பைத் தடுக்க சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் அமைச்சர் அடாம் பாபா தெரிவித்துள்ளார்.

சரவாக் கடந்த நான்கு மாதங்களில் 39 தொற்றுக் குழுவை பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சமீபத்திய கொவிட் -19 நிலைமை குறித்து விவாதிக்க சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை இயக்குநர்களுடன் இன்று பிற்பகுதியில் சரவாக் நகரில் சிறப்பு சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக அடாம் கூறினார்.

“ஜனவரி 9 முதல், சரவாக்கில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உதவி வழங்கப்படுவதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் தொற்று பரவுவதை சரவாக் நிர்வகிக்க முடியும்,” என்று அவர் இன்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடினுடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

தேசிய தொற்று வீதம் தற்போது 1.06 ஆக உள்ளது என்று அடாம் குறிப்பிட்டார். மே மாத நடுப்பகுதியில் தினசரி சம்பவங்களின் எண்ணிக்கை சராசரியாக 500- ஆகக் குறையும் என்று சுகாதார அமைச்சின் கணிப்பு இருந்தபோதிலும் தற்போது அது இன்னமும் அதிகமான எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு இணங்காததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.