பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரச குடும்பத்தினர் மட்டுமே நல்லடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
எலிசபெத் இராணியார் அந்த ஊர்வலத்தில் நடந்து வரவில்லை. எனினும் அவர் இறுதிச் சடங்குகளுக்கான வழிபாடு நடத்தப்பட்ட செயிண்ட் ஜோர்ஜ் தேவாலயத்தில் முன்கூட்டியே வந்திருந்து காத்திருந்தார். இந்த தேவாலயம் அரண்மனை வளாகத்திற்குள்ளேயே அமைந்திருக்கிறது.
அதன்பின்னர் பிலிப்ஸ் இளவரசரின் நல்லுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பொதுவாக அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்தால் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில்தான் (Westminster Hall) உடலை வைப்பார்கள். ஆனால், அங்கு தனது உடலை வைக்க வேண்டாம் என்று பிலிப் ஏற்கனவே கூறிவிட்டார்.
இறுதிச் சடங்குகள் தொடர்பில் பிரிட்டன் அரச குடும்பத்தின் அதிகாரபூர்வ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம் :