மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தை மனித வள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தனக்கு தமிழக அரசின் சிறப்பு விருது கிடைத்தாலும், அந்த விருதளிப்பின்போது, பாராட்டு பெற்றது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் என்றும் இராஜேந்திரன் தெரிவித்தார்.
தனக்குக் கிடைத்த தமிழக விருதை சங்கத்திற்கும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் கிடைத்த விருதாகவே கருதுவதாகவும் இராஜேந்திரன் மேலும் தெரிவித்தார்.
டேவான் பகாசா டான் புஸ்தாகாவின் மூலம் தமிழ் படைப்பாளர்களுக்கு அங்கீகாரமும் மான்யமும் பெற்றுத் தர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் சரவணனை இராஜேந்திரன் கேட்டுக் கொண்டார்.
அந்த நிகழ்ச்சியின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: