Home நாடு அவசரநிலை முடிவடைவதற்கு முன்போ, பின்னரோ நாடாளுமன்றம் கூடும்

அவசரநிலை முடிவடைவதற்கு முன்போ, பின்னரோ நாடாளுமன்றம் கூடும்

388
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அவசரநிலை முடிவடைவதற்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ சரியான நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்று பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து அவர் இதனைக் கூறினார்.

கொவிட் -19 தொற்றுநோய் குறித்த பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சார்ந்துள்ளது என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“ஆகஸ்ட் 1- ஆம் தேதி அவசரநிலை முடிவடைவதற்கு முன்பாகவோ அல்லது அதற்கு பின்னரோ சரியான நேரம் வரும்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் உடனடியாக அழைக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.” என்று அவர் கூறினார்.

“ஆயினும்கூட, இந்த விடயம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும், குறிப்பாக சுகாதார மலேசியா அமைச்சகம் மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றத்திடமிருந்து அரசாங்கத்தால் பெறப்படும் நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பொறுத்தது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மூலம் நாட்டில் ஜனநாயக வழிமுறைகள் தொடர்வதை உறுதி செய்வதற்கான அரசியலமைப்பு பொறுப்பை அரசாங்கம் நன்கு அறிந்திருப்பதாக தக்கியுடின் கூறினார்.

“இருப்பினும், இந்த நேரத்தில் கொடுக்கப்பட்ட முன்னுரிமை, இந்த தொற்றுநோயின் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வதாகும்,” என்று அவர் கூறினார்.