Home நாடு குறைந்தபட்ச ஊதியத்தை அரசு உயர்த்த முடியும் என்றால் அம்னோ ஆதரிக்கும்

குறைந்தபட்ச ஊதியத்தை அரசு உயர்த்த முடியும் என்றால் அம்னோ ஆதரிக்கும்

326
0
SHARE
Ad

கோலாலம்பூர்: குறைந்தபட்ச ஊதிய உத்தரவு அதிகரிக்கப்படுவது குறித்த விவாதங்களின் சலசலப்பில், இன்று அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கு கிடைக்கும் சம்பளம் குறித்து மறந்துவிடக் கூடாது என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

துணை அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் ஒரு மாதத்திற்கு 30,000 ரிங்கிட் முதல் 60,000 ரிங்கிட் வரை இருப்பதாக பதிவுகள் காட்டுகின்றன என்றார்.

“அவசர கட்டளை அமல்படுத்தப்படும்போது, ​​சில சமயங்களில் அமைச்சரையும் துணை அமைச்சரையும் நாம் பார்க்க முடியாது. நாடாளுமன்ற அமர்வு இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் அனைவரும் விடுமுறை நாட்களில், மக்களைச் சந்திக்க களத்தில் இறங்குவதில் மும்முரமாக இருக்கிறார்கள், ” என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த மே 1 அன்று தொழிலாளர் தினத்தின்போது, பிரதமர் மொகிதின் யாசின் வாழ்த்துச் செய்தி குறித்து சாஹித் கருத்துத் தெரிவித்தார். அப்போது பேசிய பிரதமர், 2020 குறைந்தபட்ச ஊதிய உத்தரவை மறுஆய்வு செய்வதை அரசாங்கம் செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.

இதற்கிடையில், இந்நேரத்தில் வாழ்க்கைச் செலவினங்கள் காரணமாக மக்கள் சுமையை எதிர்கொள்வதால், குறைந்தபட்ச ஊதியத்தை அரசாங்கத்தால் முடிந்தவரை அதிகரிக்க முடியும் என்பது உண்மை என்றால் அவரது கட்சி ஆதரிக்கும் என்று சாஹிட் கூறினார்.

“இருப்பினும், குறைந்தபட்ச ஊதிய உயர்வு இலாபகரமான சம்பள சலுகையைப் பெற விரும்பும் வெளியில் இருந்து அதிகமான தொழிலாளர்களை அழைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது செயல்படுத்தப்பட்டால், அரசாங்கம் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று நம்புகிறேன்.

“குறைந்தபட்ச ஊதியத்தை அதிகபட்ச விகிதத்தில் நிர்ணயிப்பது எளிதானது அல்ல, ஏனெனில் தனியார் துறையிலிருந்து பல தடைகள் உள்ளன. தனியார் முதலாளிகள், குறிப்பாக உற்பத்தியாளர்கள், குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க மறுக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் வெளிநாட்டு தொழிலாளர்களை எளிதாகவும் மலிவாகவும் பெற முடியும்,” என்று சாஹிட் கூறினார்.