Home நாடு அரசியல் பேசாது, மக்களுக்கு உதவ இனி செயல்படுவேன்!

அரசியல் பேசாது, மக்களுக்கு உதவ இனி செயல்படுவேன்!

752
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிராசரானா தலைவராக பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பாதிக்கப்பட்ட பி40 பிரிவில் உள்ளவர்களுக்கு உதவ கவனம் செலுத்த விரும்புவதாக தாஜுடின் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தைப் பற்றி மேலும் கவனம் செலுத்த அவர் இன்று காலை முதல் தனது அம்னோ தேர்தல் இயக்குநர் அலுவலகத்தில் இருப்பதாக எப்எம்டியிடம் கூறினார்.

“கட்டுப்பாட்டு ஆணையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ எங்கள் தேர்தல் இயந்திரங்களை அடிமட்டத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதில் இப்போது எனது கவனம் உள்ளது,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

ஏராளமான மக்கள் உணவு மற்றும் மருந்துகளை வாங்க முடியவில்லை என்ற தகவல்கள் தனக்கு கிடைத்துள்ளதாக தாஜுடின் கூறினார்.

“அவர்களில் பலர் தங்கள் மருந்து பொருட்களை சரியான நேரத்தில் பெற முடியவில்லை என்று நாங்கள் கேள்விப்படுகிறோம். எங்கள் உறுப்பினர்களை உதவிக்கு அனுப்ப நான் எங்கள் கிளைகளுடன் பேசுவேன், ” என்று அவர் கூறினார்.

இது அரசியல் பேசுவதற்கான நேரம் அல்ல, ஆனால் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் அவல நிலையை ஆராய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அம்னோவின் பாரம்பரியம், மக்களுக்கு உதவுவது என்று அவர் கூறினார். மேலும் அவர் அந்த பாரம்பரியத்தைத் தொடர திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

தேவைப்படுபவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான வழிகள் குறித்து அவர் மாநில தேர்தல் மற்றும் பிரிவு உறுப்பினர்களுடன் இயங்கலை சந்திப்புகளை நடத்துவார் என்றும் தெரிவித்தார்.