Home நாடு அம்னோ தலைவர்களுக்கு நெருக்கமானவர்கள் அவதூறு பரப்புகின்றனர்

அம்னோ தலைவர்களுக்கு நெருக்கமானவர்கள் அவதூறு பரப்புகின்றனர்

552
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தன்னைத் தாக்க முயலும் சில அம்னோ தலைவர்களுடன் நட்பில் இருப்பவர்கள்தால் அவதூறுகளைப் பரப்புவதாக தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருள் அமைச்சர் முகமட் கைருடின் அமான் ரசாலி கூறினார்.

இது மலேசிய ரப்பர் வாரியத்தில் (எம்ஆர்பி) ஏற்பட்ட சிக்கலைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது. ரப்பர் வாரியம் தனது நிலத்தை சந்தை விலைக்குக் கீழே குத்தகைக்கு விட விரும்புவதாகக் கூறப்படுகிறது.

“சில அம்னோ தலைவர்களும் தாக்க ஆர்வமாக உள்ளனர். இருப்பினும், உம்மாவின் நலனுக்காக தேசிய ஒருமித்த கருத்தை தொடர்ந்து வலுப்படுத்துவதில் இருந்து அது என்னைத் தடுக்கவில்லை. அம்னோ தலைமையுடனான நல்ல உறவும் பாதிக்கப்படவில்லை,” என்று கைருடின் கூறினார்.