Home நாடு குறையும் கொவிட்-19 தொற்று- 4,949 சம்பவங்கள் பதிவு

குறையும் கொவிட்-19 தொற்று- 4,949 சம்பவங்கள் பதிவு

522
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை மூன்றாவது நாளாக இன்று குறைந்த சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது.

இன்று 4,949 சம்பவங்களாக பதிவு செய்யப்பட்ட இந்த எண்ணிக்கையில், தொடர்ந்து சிலாங்கூர் அதிகமான சம்பவங்களைக் கொண்டுள்ளது. சிலாங்கூரில், 1,523 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 662,457- ஆக உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

மொத்தம் பதிவான 4,949 தொற்று சம்பவங்களில் 4,943 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 6 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

இதற்கிடையில் கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6,588 -ஆக பயிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 586,864-ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 71,625 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 921 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 459 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 60-ஐ தொட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 3,968-ஆக உயர்ந்திருக்கிறது.

சரவாக்கில் 744 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கோலாலம்பூர் (503), ஜோகூர் (430), நெகிரி செம்பிலான் (323), சபா (273), பினாங்கு (214), கிளந்தான் (214), கெடா (199), பேராக் (136), மலாக்கா (119), லாபுவான் (113), திரெங்கானு (86), பகாங் (61), புத்ராஜெயா (10) மற்றும் பெர்லிஸில் ஒரு சம்பவம் மட்டுமே பதிவாகி உள்ளது.