Home நாடு ‘நாடாளுமன்றமும், இரவு விடுதிகளும் ஒன்றா?’- சாஹிட்

‘நாடாளுமன்றமும், இரவு விடுதிகளும் ஒன்றா?’- சாஹிட்

389
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய மீட்புத் திட்டத்தின் 3-ஆம் கட்டத்திற்குள் நாடு நுழைந்த பின்னரே நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்த முடியும் என்ற தேசிய கூட்டணி அரசாங்கத்தின் திட்டத்தை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கண்டித்துள்ளார்.

இது அபத்தமானது என்று அவர் விவரித்தார்.

“நாட்டின் மக்கள்தொகையில் 40 விழுக்காட்டினர் தடுப்பூசிகளைப் பெற்றதற்கு என்ன தொடர்பு என்று எனக்குத் தெரியவில்லை. நாடாளுமன்றம் மீண்டும் கூட அனுமதிக்கப்படும், இது செப்டம்பர் அல்லது அக்டோபர் 2021- இல் கணிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகள் பாதுகாப்பாக இருக்க வேண்டி , நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீண்ட காலமாக கொவிட் -19 தடுப்பூசி பெற்றுள்ளனர்,” என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

3- ஆம் கட்டத்தில், அனுமதிக்கப்படாத பட்டியலில் பட்டியலிடப்பட்ட செயல்பாடுகளைத் தவிர அனைத்து பொருளாதாரத் துறைகளும் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது அது மிகவும் குழப்பமானதாக இருந்தது என்று சாஹிட் மேலும் கூறினார்.

“நாட்டின் ஜனநாயகத்தின் அடையாளமாக இருக்கும் நாடாளுமன்றம், இரவு விடுதிகள், அழகு நிலையங்கள் போன்ற பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது என்பதே இதன் பொருள்,” என்று சாஹிட் குறிப்பிட்டுள்ளார்.