Home நாடு மாமன்னர் உத்தரவுக்குப் பிறகு, அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்

மாமன்னர் உத்தரவுக்குப் பிறகு, அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்

440
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா நேற்று தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்து அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்.

இஸ்தானா நெகாரா மூலம் சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்களையும் அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“மாமன்னரை சந்தித்தப்போது, பிரதமர் கொவிட் -19 தொற்றுநோய் கையாளவது, அவசர கட்டளைகளை அமல்படுத்துதல், திட்டத்தை செயல்படுத்துதல் குறித்து அறிவுறுத்தியுள்ளார். தேசிய கொவிட்-19 நோய்த்தடுப்பு, பொருளாதார ஊக்கத் தொகைகள் மற்றும் மக்களுக்கு நிதி உதவி, நாடாளுமன்ற அமர்வை செயல்படுத்துதல், தேசிய மீட்புத் திட்டம் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்களும் இதில் அடங்கும்,” என்று அந்த அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

எனவே, மத்திய அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் அடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை, அல்-சுல்தான் அப்துல்லா விரைவில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.