Home நாடு பினாங்கு 2-ஆம் கட்ட மீட்சி நிலைக்கு புதன்கிழமை திரும்புகிறது

பினாங்கு 2-ஆம் கட்ட மீட்சி நிலைக்கு புதன்கிழமை திரும்புகிறது

740
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாளை புதன்கிழமை ஜூலை 7-ஆம் தேதி முதல் பினாங்கு மாநிலம் 2-ஆம் கட்ட மீட்சி நிலைக்குத் திரும்பும் என தற்காப்புத்துறை அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்திருக்கிறார்.

கடந்த 7 நாட்களில் ஒவ்வொரு 100,000 பேர்களுக்கு 9.5 விழுக்காடு கொவிட் தொற்றுகளை மட்டுமே பினாங்கு பதிவு செய்திருக்கிறது.

தீவிர சிகிச்சைப் பிரிவுக்குத் தேவைப்படும் மருத்துவப் படுக்கைகளும் போதுமான அளவில் பினாங்கில் இருக்கிறது. இதுவரையில் கொவிட் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றவர்களின் விழுக்காடு மொத்த மக்கள் தொகையில் 10.1 எனவும் பதிவாகியிருக்கிறது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து, பினாங்கு 2-ஆம் கட்ட மீட்சி நிலைக்குத் திரும்புகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2-ஆம் கட்டத்திற்கு முன்னேற என்ன குறியீடுகள்

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) அறிவிக்கப்பட்ட ஐந்து மாநிலங்களைத் தவிர மேலும் சில மாநிலங்கள் குறிப்பிடத்தக்க விதத்தில் கொவிட்-19 நோய் தொற்றிலிருந்து மீட்சி  கண்டு வருவதால் விரைவில் நாடு முழுமையும் விரைவில் இரண்டாம் கட்ட மீட்சிப் பாதைக்குள் நுழையலாம் என பிரதமர் மொகிதின் யாசின் நேற்று தெரிவித்திருந்தார்.

3 குறியீடுகள் இருந்தால் ஒரு மாநிலம் மீட்சித்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு நகரும் என பிரதமர் கூறியிருக்கிறார்.

பிரதமர் கூறும் 3 குறியீடுகள், மொத்த கொவிட் தொற்றுக்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்திற்கும் குறைவாகப் பதிவாவது; தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான படுக்கைகளின் எண்ணிக்கை முறையாக நிர்வகிக்கப்படுவது; மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர் 2 அளவைகள் கொண்ட முழு தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெற்று இருப்பது; ஆகியவையாகும்.

இந்தக் குறியீடுகள் இருப்பின் அந்த மாநிலம் இரண்டாம் கட்ட நிலைக்கு திரும்பும் என பிரதமர் அறிவித்திருக்கிறார்.

5 மாநிலங்கள் 2-ஆம் கட்ட மீட்சிப் பாதைக்குத் திரும்பியிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்திருந்தார்.

மொத்த கொவிட் தொற்று எண்ணிக்கைகள் குறைந்தது, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான படுக்கைகளை முறையாக நிருவகிப்பது, அதிகமான மக்களுக்கு தடுப்பூசிகள் போட்டது ஆகியவை காரணமாக 5 மாநிலங்கள் மீட்சி நிலைத் திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டத்திற்கு முன்னேறுகின்றன என தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்திருக்கிறார்.

கிளந்தான், பகாங், பேராக், திரெங்கானு, பெர்லிஸ் ஆகியவையை திங்கட்கிழமை முதல் இரண்டாம் கட்ட மீட்சி நிலைக்குத் திரும்பிய 5 மாநிலங்களாகும்.