Home நாடு கொவிட்-19: மரணங்களின் எண்ணிக்கை 77 – புதிய தொற்றுகள் 9,180

கொவிட்-19: மரணங்களின் எண்ணிக்கை 77 – புதிய தொற்றுகள் 9,180

1986
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை ஜூலை 9 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் 77 மரணங்கள் பதிவாயின.

இன்றைய ஒருநாள் மரணங்களைத் தொடர்ந்து நாட்டில் பதிவாகியிருக்கும் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 5,980 ஆக உயர்ந்தது.

மரணமடைந்தவர்களில் ஆண்கள் 36 பேர், பெண்கள் 41 பேர்.  மரணமடைந்தவர்களில் 7 பேர் மரணத்துக்குப் பின்னரே மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டனர்.

#TamilSchoolmychoice

நேற்றைய ஒருநாளில் மரணமடைந்தவர்களில் யாரும் 30 வயதுக்கும் குறைந்தவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மரணமடைந்தவர்களில் 49 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாவர். 28 பேர் 50-க்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர்களாவர்.

ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை 9,180

ஒருநாள் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை இன்றைய ஒருநாளில் 9 ஆயிரத்துக்கும் கூடுதலாக அதிகரித்து 9,180 எனப் பதிவாகியது.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 817,838 ஆக உயர்ந்திருக்கிறது.

மொத்தம் பதிவான 9,180 தொற்று சம்பவங்களில் 9,173 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 7 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 5,713-ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 731,193 -ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 80,665 ஆக உயர்ந்திருக்கிறது.

இவர்களில் 959 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 465 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 817,838 ஆக உயர்ந்திருக்கிறது.

சிலாங்கூர் 4,400 தொற்றுகளோடு மிக அதிகமான தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.

அதற்கு அடுத்த நிலையில் கோலாலம்பூர் தொற்றுகளோடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

மூன்றாவது இடத்தை 899 தொற்றுகளோடு நெகிரி செம்பிலான் பிடித்திருக்கிறது.

சரவாக் 406 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.

நாடு முழுமையிலும் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 8) நள்ளிரவு வரையில் 376,909 அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டன.

புதன்கிழமை (ஜூலை 7) வரையில் நாடு முழுமையிலும் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டியது.

நேற்று நள்ளிரவு வரையில் ஒருநாளில் செலுத்தப்பட்ட 376,909 தடுப்பூசிகளில் 222,927 முதல் தடவை போடப்பட்ட தடுப்பூசிகளாகும். எஞ்சிய 153,982 அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் இரண்டாவது தடவையாகச் செலுத்தப்பட்டவையாகும்.

மாநிலங்களைப் பொறுத்தவரை கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையைப் போன்றே தடுப்பூசிகள் செலுத்துவதிலும் சிலாங்கூர் முதல் மாநிலமாக இருக்கிறது.

நேற்று ஒரு நாளில் 63,177 தடுப்பூசிகள் சிலாங்கூரில் மட்டும் செலுத்தப்பட்டிருக்கின்றன.

அடுத்த நிலையில் கோலாலம்பூரில் 36,302 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன.

நாடு முழுமையிலும் கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.