Home One Line P1 தெங்கு அட்னான் மேல்முறையீட்டில் வெற்றி! தண்டனை இரத்து!

தெங்கு அட்னான் மேல்முறையீட்டில் வெற்றி! தண்டனை இரத்து!

1282
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஒரு தொழிலதிபரிடமிருந்து 2 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் வாங்கியதற்காக தொடரப்பட்ட வழக்கில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் விதித்த  தண்டனைக்கு எதிராக முன்னாள் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் சமர்ப்பித்த மேல்முறையீட்டில் அவர் வெற்றி பெற்றார்.

தெங்கு அட்னானின் குற்றச்சாட்டுகளை நிரூபித்து தண்டனை வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி முறையாக சட்ட அணுகுமுறையைப் பயன்படுத்தவில்லை என 2-1 பெரும்பான்மையில் தீர்ப்பை வழங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை ஜூலை 16) தெரிவித்தது.

தெங்கு அட்னான் பெற்ற 2 மில்லியன் தொகை இரண்டு தேர்தல்களுக்கான நன்கொடை என்றும் அதை இலஞ்சமாக வகைப்படுத்த முடியாது என்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.

#TamilSchoolmychoice

70 வயதான தெங்கு அட்னான் தனது குற்றச்சாட்டு மற்றும் தண்டனைக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,  தெங்கு அட்னானுக்கு 12 மாத சிறைத்தண்டனையும், 2 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்தார்.

அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தனது மேல்முறையீட்டைச் சமர்ப்பித்த தெங்கு அட்னான், இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் விடுதலையாகியிருக்கிறார்.

தெங்கு அட்னான் புத்ரா ஜெயா நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமாவார்.