Home நாடு கொவிட்-19: மரணங்கள் 115 – சிகிச்சை பெறுபவர்கள் 114,053 ஆக அதிகரிப்பு

கொவிட்-19: மரணங்கள் 115 – சிகிச்சை பெறுபவர்கள் 114,053 ஆக அதிகரிப்பு

2440
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை ஜூலை 16 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் 115 மரணங்கள் பதிவாயின. கொவிட் தொற்று தொடங்கியதில் இருந்து கடந்த சில நாட்களாக ஒருநாள் மரண எண்ணிக்கைகள் நூற்றுக்கும் அதிகமானதாக இருந்து வருகின்றன.

அதே வேளையில் தொற்று பீடித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை இரண்டாவது நாளாக 1 இலட்சத்தைக் கடந்து 114,053 என பதிவாகியது.

மேலும் 896 பேர் நாடு முழுவதிலும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 459 பேர் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இன்றைய ஒருநாள் மரணங்களைத் தொடர்ந்து நாட்டில் பதிவாகியிருக்கும் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,728 ஆக உயர்ந்தது.

ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை 12,541

இன்றைய ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கையான 12,541 -ஐ சேர்த்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 893,323 ஆக உயர்ந்திருக்கிறது.

மொத்தம் பதிவான 12,541 தொற்று சம்பவங்களில் 12,525 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 16 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 6,742– ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 772,542 -ஆக உயர்ந்திருக்கிறது.

இன்று வெள்ளிக்கிழமை ஜூலை 16 வரையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 12,541 புதிய தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.

நேற்றைய எண்ணிக்கையான 13,215 தொற்றுகளுடன் ஒப்பிடும்போது இது குறைவுதான் என்றாலும், நாட்டில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில் தொற்றுகள் பதிவாகி வருவது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 893,323 ஆக உயர்ந்திருக்கிறது.

மாநிலங்களைப் பொறுத்தவரையில் முதல் இடத்தில் வழக்கம்போல் சிலாங்கூர் இருக்கிறது. 5,512 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்திருக்கிறது. இதன் மூலம் கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்தைக் கடந்த தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக சிலாங்கூர் இருக்கிறது.

வழக்கம்போல் மொத்த தொற்றுகளில் ஏறத்தாழ பாதி எண்ணிக்கையிலான தொற்றுகள்  சிலாங்கூரில் பதிவாகியிருக்கின்றன.

சிலாங்கூருக்கு அடுத்த நிலையில் 1,619 தொற்றுகளோடு நெகிரி செம்பிலான் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

கோலாலம்பூர் 1,542 தொற்றுகளோடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கோலாலம்பூரில் நாள்தோறும் தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.