Home நாடு நாடாளுமன்றம் இன்று பிற்பகலில் நடைபெறவில்லை – ஒத்தி வைப்பு

நாடாளுமன்றம் இன்று பிற்பகலில் நடைபெறவில்லை – ஒத்தி வைப்பு

394
0
SHARE
Ad

கோலாலம்பூர் :இன்று மாலை 5.15 மணி வரை கொவிட் தொற்று அபாயம் காரணமாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 5.15 மணிக்கு நாடாளுமன்ற அவைத் தலைவர் பொறுப்பை ஏற்ற அவையின் துணைத் தலைவர் முகமட் ரஷிட் ஹாஸ்னோன் கொவிட் தொற்று காரணமாக இன்றைய நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்படுகிறது என அறிவித்தார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து கூச்சலிட்ட வேளையில் வேறு எதுவும் கூறாமல் தனது இருக்கையிலிருந்து வெளியேறினார் முகமட் ரஷிட் ஹாஸ்னோன்.

அதன் பின்னர், நாடாளுமன்ற ஒலிபெருக்கிகள் நிறுத்தப்பட்டன. நேரலை ஒளிபரப்புகள் தொலைக்காட்சியிலும் நிறுத்தப்பட்டன.

நடந்தது என்ன?

#TamilSchoolmychoice

இன்று காலையில் வெளியிடப்பட்ட மாமன்னர் அறிக்கையைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளிகளினால் நாடாளுமன்றம் பிற்பகலில் தொடரும் என அறிவிக்கப்பட்டது. தக்கியூடின் ஹாசானும், சட்டத் துறை தலைவர் இட்ருஸ் ஹாருணும் தனக்கு வழங்கிய உறுதிமொழிகளுக்கு முரணாக நடந்து கொண்டனர் என்றும் என்னை அவமதித்து விட்டனர் என்றும் மாமன்னர் கடுமையான அறிக்கை ஒன்றை இன்று காலையில் விடுத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் மொகிதின் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அறைகூவல் விடுத்தார்.

தொடர்ந்து ஏற்பட்ட அமளிகளினால் நாடாளுமன்றம் பிற்பகலில் தொடரும் என அறிவிக்கப்பட்டது. எனினும் பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்க வேண்டிய நாடாளுமன்றக் கூட்டம் ஒருமணி நேரம் ஒத்தி வைக்கப்படுகிறது என்றும் பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கும் என்றும் அவைத் தலைவர் அசார் அசிசான் அறிவித்தார்.

3.30 மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது நாடாளுமன்ற பணியாளர்கள் இருவருக்கு கொவிட் தொற்று கண்டிருப்பதாகவும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொவிட் பரிசோதனைகளுக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் அவையின் துணைத் தலைவர் ஹாஸ்னோன் அறிவித்தார்.

மீண்டும் மாலை 5.15 மணிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், மீண்டும் 5.15 மணிக்கு நாடாளுமன்றம் கூடியபோது இன்றைய நாடாளுமன்றக் கூட்டம் முழுமையாக ஒத்திவைக்கப்படுவதாக ஹாஸ்னோன் அறிவித்தார்.

இன்று பிற்பகல் 3.30 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் 5.15 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவையின் துணைத் தலைவர் டத்தோ முகமட் ரஷிட் ஹாஸ்னோன் அறிவித்தார்.

பிற்பகல் 3.30 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது அவைத் தலைவர் பொறுப்பை ஏற்ற முகமட் ரஷிட் ஹாஸ்னோன், நாடாளுமன்ற பணியாளர்கள் இருவருக்கு கொவிட் தொற்று கண்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருப்பதாகவும் அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் மீது கொவிட் பரிசோதனைகள் நடத்தப்படும் என்றும் அதற்கு ஏதுவாக மாலை 5.15 மணிவரை நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்படுவதாகவும் ஹாஸ்னோன் அறிவித்து விட்டு நாடாளுமன்ற அவையிலிலிருந்து வெளியேறினார்.