Home நாடு 18 வயது வாக்குரிமையை நிறைவேற்றுவோம் – சட்டத் துறை அமைச்சர் உறுதி

18 வயது வாக்குரிமையை நிறைவேற்றுவோம் – சட்டத் துறை அமைச்சர் உறுதி

492
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் வாக்குரிமையை நிறைவேற்றுவோம் என சட்டத் துறை அமைச்சர் வான் ஜூனாய்டி துவாங்கு ஜாபார் உறுதியளித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் 18 வயதானவர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என சரவாக் மாநிலத்தில் உள்ள கூச்சிங் உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.

இதுகுறித்துக் கருத்துரைத்த சட்டத்துறை அமைச்சர் வான் ஜூனாய்டி துவாங்கு ஜாபார், 18 வயதானவர்கள் பொதுத்தேர்தலில் வாக்களிப்பதை உறுதி செய்யும் நடைமுறையை செயல்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும் கூச்சிங் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இன்று வரையில் அரசாங்கம் முடிவு செய்யவில்லை என்றும் வான் ஜூனாய்டி தெரிவித்திருக்கிறார்.

மலேசியத் தேர்தல் ஆணையத்திற்கு வருகை தந்தபின்னர் அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal