Home உலகம் சோமாலியாவில் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மலேசியர் கைது

சோமாலியாவில் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மலேசியர் கைது

625
0
SHARE
Ad

மொகாடிஷு ( சோமாலியா) : சோமாலியாவில் இயங்கிவரும் அல்-ஷபாப் எனப்படும் பயங்கரவாத இயக்கத்தில் சேர்வதற்காக அங்கு சென்றிருந்த மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதனை உறுதிப்படுத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சைபுடின் அப்துல்லா (படம்) தமது அமைச்சு இந்த விவகாரம் தொடர்பில் அணுக்கமாக கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அந்த நபரின் உடல் நலம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சு அக்கறை செலுத்தி வருவதாகவும் சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சூடானில் உள்ள மலேசியத் தூதரக அதிகாரிகள் கைது செய்யப்பட்ட மலேசியரை நேரில் சென்று சந்தித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை மலேசியா அணுக்கமாக கண்காணித்து வரும் என்றாலும் சோமாலியாவின் உள்நாட்டு சட்டங்களையும் தாம் மதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவரின் விவரங்கள் அவரது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal