Home உலகம் உக்ரேன் முதல் நாள் சண்டையில் 137 இராணுவத்தினர் பலி

உக்ரேன் முதல் நாள் சண்டையில் 137 இராணுவத்தினர் பலி

820
0
SHARE
Ad
நாட்டு மக்களிடம் உரையாற்றிய உக்ரேனிய அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி

கீவ் : பல முனைகளில் இருந்தும் ரஷிய இராணுவம் உக்ரேன் மீது தாக்குதல்கள் நடத்தத் தொடங்கியதைத் தொடர்ந்து முதல் நாள் போரில் 137 உக்ரேனிய இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரஷியா உக்ரேன் தொடர்பான் ஆகக் கடைசியான தகவல்கள் பின்வருமாறு:

ரஷியாவுக்கு எதிராகத் தடைகள் ஜோ பைடன் அறிவித்தார்

நேற்று வியாழக்கிழமை உக்ரேன் விவகாரம் குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளை ரஷியாவுக்கு எதிராக விதித்தார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் உக்ரேன் மீதான ரஷிய இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து உலகளாவிய நிலையில் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றன.

ஐரோப்பிய அமெரிக்க நாடுகள், ரஷியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன. ஒவ்வொரு தடைக்கும் பதிலடி கொடுக்கப்படும் என ரஷியாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரேன்-ரஷியா மோதலினால் எண்ணெய் விலைகள் மேலும் உயர்வடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி அரேபியாவுக்கு அடுத்து உலகிலேயே அதிக அளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷியா இரண்டாவது நிலையில் இருந்து வருகிறது.

விளாடிமிர் புடினின் அதிரடி நடவடிக்கைகள்

கிழக்கு உக்ரேனில் உள்ள சர்ச்சைக்குரிய இரண்டு பிரதேசங்களான டோனெட்ஸ்க், லூஹான்ஸ்க் ஆகியவை இனி சுதந்திர நாடுகள் என புடின் அறிவித்ததைத் தொடர்ந்து ரஷியத் துருப்புகள் உக்ரேனின் சர்ச்சைக்குரிய பிரதேசங்களில் நுழைந்தன.

இந்தப் பிரதேசங்கள் டோன்பாஸ் எனக் குறிப்பிடப்படுகின்றன. உக்ரேனின் கிழக்குப் பகுதியில் டோனெட்ஸ்க், லூஹான்ஸ்க் என்னும் 2 பிரதேசங்களில் ரஷியாவின் ஆதரவிலான கிளர்ச்சியாளர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இவர்களுக்கு ரஷியா ஆதரவு தந்து வருகின்றது. இப்போது அந்தப் பிரதேசங்களைத்தான் சுதந்திர நாடுகளாக ரஷிய அதிபர் புடின் அறிவித்துள்ளார்.

ரஷிய இராணுவத்தை டோனெட்ஸ்க், லூஹான்ஸ்க் ஆகிய பிரதேசங்களுக்கு அனுப்பிய புடின் தற்போது ரஷிய இராணுவத்தை உக்ரேன் தலைநகர் கீவ் நோக்கிச் செல்ல உத்தரவிட்டுள்ளார்.

ரஷியா இராணுவத்தினர் கீவ் நகரை முற்றுகையிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.