அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் நிலவி வரும் கட்டாயத் தொழிலாளர் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் அமெரிக்க அரசாங்க அதிகாரிகளுடன் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து மலேசியாவில் கட்டாயத் தொழிலாளர் பிரச்சனையை துடைத்தொழிக்க அமெரிக்கா மலேசியாவுடன் ஒத்துழைக்கத் தயார் என சரவணன் அறிவித்தார்.
அடுத்த மாதத்தில் தமது அமைச்சு ஒருநாள் நடைபெறும் கலந்துரையாடல் பட்டறை ஒன்றை நடத்தி கட்டாயத் தொழிலாளர் விவகாரம் குறித்த விழிப்புணர்வையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் எனவும் சரவணன் கூறினார்.