Home நாடு தெங்கு சாப்ருல் சிலாங்கூர் சட்டமன்றத்திற்கு போட்டியிடலாம்

தெங்கு சாப்ருல் சிலாங்கூர் சட்டமன்றத்திற்கு போட்டியிடலாம்

388
0
SHARE
Ad

ஷா ஆலாம்: கடந்த 15-வது பொதுத் தேர்தலில் கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி கண்ட தெங்கு சாப்ருல் அப்துல் அசிஸ் அடுத்த சில மாதங்களில் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவிருப்பதாக ஆரூடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றில் தெங்கு சாப்ருல் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக, கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுயின் கீழ்வரும் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.