11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்காக மாநாட்டுக்காக 1 மில்லியன் ரிங்கிட் மானியத்தை வழங்கியுள்ளதாகவும் பலத்த கரவொலிகளுக்கிடையில் அன்வார் தனதுரையில் தெரிவித்தார்.
அந்த அடிப்படையில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய ஆய்வியல் துறை மேலும் தன் நடவடிக்கைகளை விரிவாக்க 2 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அன்வார் தனதுரையில் அறிவித்தார்.
உலகத் தமிழாராய்ச்சி மன்றத் தலைவரான டான்ஸ்ரீ டாக்டர் த.மாரிமுத்து தன் பழைய நண்பர் எனக் குறிப்பிட்ட அன்வார், திருக்குறள் குறித்த விவரங்களை அவரிடம் இருந்துதான் கற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.