Home இந்தியா நரேந்திர மோடி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் – பரபரப்பான விவாதங்கள் தொடங்கின

நரேந்திர மோடி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் – பரபரப்பான விவாதங்கள் தொடங்கின

511
0
SHARE
Ad

புதுடில்லி : ராகுல் காந்தியின் 2 ஆண்டு கால சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, அவர் நாடாளுமன்றத்திற்குத் திரும்பும் பரபரப்பான தருணத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த விவாதங்கள் நாடாளுமன்றத்தில் தொடங்கியுள்ளன. ராகுல் காந்தியும் இந்த விவாதத்தில் பங்கு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகக் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் இன்று செவ்வாய்க்கிழமை முதல் விவாதம் நடைபெறும் என மக்களவைத் தலைவர் அறிவித்திருந்தார். ஆகஸ்ட் 10-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மைத்தேயி – குகி இனத்தவர் இடையே கடந்த மே மாதம் 3-ஆம் தேதி முதல் மோதல்கள் நடந்து வருகின்றன. இதன் தொடர்பில் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் அவர் மீதும் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளன.

#TamilSchoolmychoice

எதிர்க்கட்சிகள் இணைந்து தற்போது இந்தியா என்ற புதிய கூட்டணியைத் தோற்றுவித்துள்ளன. இந்தக் கூட்டணியின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும் ஏற்றுக் கொண்டார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே மணிப்பூர் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றம் அமளி துமளியுடன் செயல்பட்டு வருகிறது.

இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள 545 இடங்களில் பெரும்பான்மையாக 301 இடங்களை பாஜக வைத்திருக்கிறது.

இதனால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றியடைய வாய்ப்பில்லை. எனினும் இன்னும் ஓராண்டுக்குள் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.