Home நாடு சிலாங்கூர் : 56 தொகுதிகள் – 4.00 மணிவரை 65% வாக்களிப்பு – மோட்டார் சைக்கிளில்...

சிலாங்கூர் : 56 தொகுதிகள் – 4.00 மணிவரை 65% வாக்களிப்பு – மோட்டார் சைக்கிளில் வந்து வாக்களித்த மந்திரி பெசார்

304
0
SHARE
Ad

கோலாலம்பூர் : சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, தான் போட்டியிடும் சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியில் இன்று காலை வாக்களித்தார். அவர் தன் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வந்து வாக்களித்தது வித்தியாசமான காட்சியாக அமைந்தது.

இன்று பிற்பகல் 4.00 மணி வரை சிலாங்கூர் மாநிலத்தில் 65 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகின. 56 சட்டமன்றங்களைக் கொண்டது சிலாங்கூர் மாநிலம்.

சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி மீண்டும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சில சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

பக்காத்தான் கூட்டணி வெற்றி பெற்றால் அமிருடின் ஷாரி மீண்டும் மந்திரி பெசார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோம்பாக் நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்ட அஸ்மின் அலி உலு கிளாங் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பும் எங்கும் எழுந்துள்ளது. அப்படியே அவரும் வெற்றி பெற்று, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியும் சிலாங்கூரைக் கைப்பற்றினால் – அவரே மந்திரி பெசாராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

1999-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் உலு கிளாங் தொகுதியில் அஸ்மின் அலி முதன் முறையாக வெற்றி பெற்றார். 2008 முதல் புக்கிட் அந்தாராபாங்சா தொகுதிக்கு மாறிப் போட்டியிட்டார். கடந்த பொதுத் தேர்தலில் புக்கிட் அந்தாராபாங்சா தொகுதியில் வெற்றி பெற்றார்.