இன்று பிற்பகல் 4.00 மணி வரை சிலாங்கூர் மாநிலத்தில் 65 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகின. 56 சட்டமன்றங்களைக் கொண்டது சிலாங்கூர் மாநிலம்.
பக்காத்தான் கூட்டணி வெற்றி பெற்றால் அமிருடின் ஷாரி மீண்டும் மந்திரி பெசார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோம்பாக் நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்ட அஸ்மின் அலி உலு கிளாங் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பும் எங்கும் எழுந்துள்ளது. அப்படியே அவரும் வெற்றி பெற்று, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியும் சிலாங்கூரைக் கைப்பற்றினால் – அவரே மந்திரி பெசாராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1999-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் உலு கிளாங் தொகுதியில் அஸ்மின் அலி முதன் முறையாக வெற்றி பெற்றார். 2008 முதல் புக்கிட் அந்தாராபாங்சா தொகுதிக்கு மாறிப் போட்டியிட்டார். கடந்த பொதுத் தேர்தலில் புக்கிட் அந்தாராபாங்சா தொகுதியில் வெற்றி பெற்றார்.