Home நாடு இந்தியா, சீனா சுற்றுப் பயணிகளுக்கு விசா சலுகைகள்

இந்தியா, சீனா சுற்றுப் பயணிகளுக்கு விசா சலுகைகள்

273
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவில் சுற்றுலாத்துறையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் இந்தியா, சீனாவில் இருந்து வருகை தரும் சுற்றுப் பயணிகளுக்கு விசா என்னும் குடிநுழைவு அனுமதிகளுக்கான கட்டுப்பாடுகள் தளத்தப்படும் புதிய சலுகைகள் வழங்கப்படும் என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்தார்.

இந்தியா, சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கோலாலம்பூர் வந்தடைந்ததும் உடனடியாக விசா வழங்குதல், உறவினர்களைச் சந்திப்பதற்கான விசா சலுகைகள், பல முறை வந்து செல்லும் வகையிலான விசா, என முதலீட்டாளர்களுக்கும் பல சலுகைகள் வழங்கப்படும் என இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) தாக்கல் செய்த 2024 வரவு செலவுத் திட்டத்தின் மீதான உரையின்போது அன்வார் தெரிவித்தார்.

ஏழ்மை குடும்பங்களுக்கு மின்சாரக் கட்டணம் கழிவு

#TamilSchoolmychoice

மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு அவர்களின் மின்சாரக் கட்டணத்தில் 40 ரிங்கிட் கழிவு வழங்கப்படும் என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்தார். இதற்காக 55 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிதியமைச்சராக சமர்ப்பிக்கும் முதல் வரவு செலவுத் திட்டமான 2024 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) பிற்பகல் 4.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

நிதியமைச்சருமான அவர் பிரதமரானதும் இந்த ஆண்டு தொடக்கத்தில் 2023-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சில கூடுதல் அம்சங்களை இணைத்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த 2023 வரவு செலவு திட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபரில் அப்போதைய நிதியமைச்சர் தெங்கு சப்ருல்  நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

393.8 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிதி ஒதுக்கீட்டை 2024 வரவு செலவுத் திட்டம் கொண்டிருக்கும் என அன்வார் அறிவித்தார்.

இந்த ஒதுக்கீட்டில் பெரும்பகுதி – 42.3 விழுக்காடு நிதி, கல்வி, சுகாதாரம் அமைச்சுகளுக்கு ஒதுக்கப்படும் எனவும் தன் உரையின் தொடக்கத்தில் அன்வார் தெரிவித்தார்.