இதைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் இரு தரப்புகளுக்கும் இடையிலான பணயக் கைதிகள் பரிமாற்றம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 4 நாட்களுக்கு போர்நிறுத்தம் காணும் என்றும் பணயக் கைதிகள் பரிமாற்றம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் காசா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் நேற்று வியாழக்கிழமை தாக்குதலை நடத்தியது.
இதற்கிடையில் காசா வட்டாரத்தின் மிகப் பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநரை இஸ்ரேலிய இராணுவம் கைது செய்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போராட்டத்தால் இதுவரையில் பல குழந்தைகள் மரணமடைந்திருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் இரு தரப்பிலும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.