Home நாடு ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் முன்னாள் பிரதமரின் மகன்!

ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் முன்னாள் பிரதமரின் மகன்!

227
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : முன்னாள் பிரதமர் ஒருவரின் மகனை ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைக்கு அழைத்திருக்கிறது.

1990-ஆம் ஆண்டுகளில் அந்த நபரின் வணிக நடவடிக்கைகளையும் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருகிறது.

பல வாரங்களுக்கு முன்பே அந்த முன்னாள் பிரதமரின் மகனை ஊழல் தடுப்பு ஆணையம் அழைத்ததாக ஊடகங்கள் தெரிவித்தன. இன்று (ஜனவரி 17) புதன்கிழமை அந்த நபரின் உள்நாட்டு வெளிநாட்டு சொத்துகளை பகிரங்கமாக எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும் என ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து யார் அந்த முன்னாள் பிரதமர் என்ற ஆரூடங்கள் எழுந்திருக்கின்றன.

அரசாங்க சார்பு நிறுவனம் ஒன்றைக் கையகப்படுத்தி, அரசாங்கத்தின் தனியார் மயத் திட்டத்தில் பங்கு பெற்று – பின்னர் அந்த நிறுவனத்தை மற்றவர்களுக்கு விற்பனை செய்ததில் மில்லியன் கணக்கான ரிங்கிட்டை வருமானமாக அந்த முன்னாள் பிரதமரின் மகன் பெற்றார் என அறியப்படுகிறது.

அயல் நாடுகளில் பணம் வைத்திருந்தவர்கள் என வெளிநாட்டு இணையத் தளங்கள் வெளியிட்ட தரவுகளில் விசாரணைக்கு அழைக்கப்பட்டவரின் பெயரும் இடம் பெற்றிருந்தது.