Home Photo News ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் துன் சாமிவேலுவின் திருவுருவச் சிலை திறப்பு!

ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் துன் சாமிவேலுவின் திருவுருவச் சிலை திறப்பு!

282
0
SHARE
Ad

சுங்கைப்பட்டாணி : நேற்று வெள்ளிக்கிழமை (மே 24) மாலை ஏய்ம்ஸ் பல்கலைக் கழக வளாகத்தில் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தவருமான அமரர் துன் ச.சாமிவேலு அவர்களின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மஇகா தலைவர்களும் பிரமுகர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி குறித்து மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கீழ்க்காணும் வாசகங்களைப் பதிவிட்டார்:

பார் போற்றிய சகாப்தம் நீ..
என் வாழ்நாளில் எனக்குவாய்த்த தெய்வம் நீ..

#TamilSchoolmychoice

‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை’ – 400

கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை என உணர்ந்த உன்னதத் தலைவர் துன் ச.சாமிவேலு அவர்கள். வீட்டுக்கொரு பட்டதாரி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தவர் மட்டுமல்ல, அதை நிறைவேற்ற ஏதுவாக உயர்கல்விக் கூடங்களையும் நிறுவியவர்.


அவரது உருவச் சிலையை இன்று, துன் அவர்களின் எண்ணத்திலும், உழைப்பிலும் உருவான ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் ம.இ.கா நிறுவியது, வரலாற்றுப்பூர்வமான நிகழ்ச்சி மட்டுமல்ல, வரலாறான ஒரு மாமனிதருக்கு நன்றியுள்ள மனித மனங்களால் கட்டப்பட்ட கற்சிலை.

துன் சாமிவேலுவின் திருவுருவச் சிலை திறப்பு விழா குறித்த படக் காட்சிகளை இங்கே காணலாம்: