Home உலகம் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு – காதுப் பகுதியில் இரத்தம் -உயிர் தப்பினார்!

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு – காதுப் பகுதியில் இரத்தம் -உயிர் தப்பினார்!

227
0
SHARE
Ad

வாஷிங்டன் : முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை (ஜூலை 13) மாலை பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் நடந்த அவரது பேரணியின் போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். குறைந்தபட்சம் ஒரு பார்வையாளரும் துப்பாக்கி ஏந்தியவரும் இறந்துவிட்டதாகவும், மேலும் இரண்டு பார்வையாளர்கள் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்காவின் இரகசிய சேவை தெரிவித்துள்ளது.

டிரம்ப் சமூக ஊடகங்களில், தான் சுடப்பட்டதாகவும் “வலது காதின் மேற்பகுதியில்” குண்டு பாய்ந்ததாகவும் கூறினார். முகத்தில் இரத்தம் படிந்த நிலையில் பேரணி மேடையிலிருந்து அவசரமாக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். டிரம்ப் பாதுகாப்பாக உள்ளதாகவும் இரகசிய சேவைப் பிரிவு தெரிவித்தது. டிரம்ப் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் பேரணிக்கு வெளியே “உயரமான இடத்திலிருந்து” துப்பாக்கி ஏந்தியவர் பல முறை சுட்டதாகவும், பின்னர் காவல் துறையினரால் அவர் கொல்லப்பட்டதாகவும் இரகசிய சேவை தெரிவித்தது. பேரணி நடந்த இடத்திற்கு வெளியே ஒரு கட்டிடத்தின் கூரையில் துப்பாக்கி ஏந்தியவர் இருந்ததாக அரசாங்க மையங்கள் தெரிவித்தன. சட்ட அமலாக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தச் சூட்டுச் சம்பவம் கொலை முயற்சியாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

ஜனாதிபதி ஜோ பைடன் சனிக்கிழமை இரவு இந்த வன்முறையைக் கண்டித்தார். விடுத்த அறிக்கையில் டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதற்கு தான் இறைவனுக்கு நன்றி சொல்வதாகவும் கூறியிருந்தார்.