சரவணன் தொடர்ச்சியாக கடந்த 17 ஆண்டுகளாக இவ்வாறு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கி வருகிறார் என்பதும் தாப்பா மக்கள் மனதில் அவர் நிலைத்திருப்பதற்கும் ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை.
தீபாவளி நெருங்கி வரும்போது, இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அன்பு, கருணை, ஒற்றுமை ஆகியவற்றை அனவரும் நினைவில் கொள்வது சிறந்தது. இதனைத் தவறாமல் கடைப்பிடித்து வரும் சரவணன் ஒவ்வொரு தீபாவளித் திருநாளின் போதும் தாப்பா நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்குக் இவ்வாறு நலத் திட்டங்களை வழங்குவதைத் தனது கடமையாகக் கொண்டுள்ளார்.
தீபாவளிக்கு மட்டுமின்றி, நோன்புப் பெருநாள், சீனப்பண்டிகை, கிறிஸ்மஸ் போன்ற பண்டிகைகளின்போதும் அந்தப் பெருநாட்களைக் கொண்டாடும் தாப்பாவில் உள்ள அனைத்து சமூகத்தினருக்கும் இத்தகைய அன்பளிப்புகளை சரவணன் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.