ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மீட்புப் பணிகள் குறித்து முதல்வர் விஜய் பகுகுணா (படம்) நிருபர்களிடம் கூறுகையில், ‘வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சிக்கியுள்ள அனைவரும் 2 நாளில் மீட்கப்படுவார்கள். ஹர்சிஸ் பகுதியில் மக்கள் இன்னும் சிக்கியுள்ளனர்.
இதனை ஏற்க மறுத்த முதல்வர் பகுகுணா, கேதார்நாத் கோவிலை உத்தரகாண்ட் அரசு கட்டும் என்றும், இதற்கு யாராவது உதவி செய்தால் வரவேற்போம் என்றும் கூறினார்.