Home இந்தியா சென்னை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

சென்னை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

547
0
SHARE
Ad

Nov - 06 - A

சென்னை, நவ 7- கடந்த ஆட்சியில் துவக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். மொத்தம் 4,000 மணி நேரம் சோதனை ஓட்டம் நடைபெறும். அடுத்த ஆண்டு மத்தியில் மெட்ரோ ரயில் சேவை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் குடியேறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

#TamilSchoolmychoice

விரைவான, வசதியான, நவீன போக்குவரத்து வசதியை வழங்குவது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் கடந்த ஆட்சியில் துவக்கப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 42 ரயில் பெட்டித் தொடர்கள் இயக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக தலா நான்கு பெட்டிகள் கொண்ட ஒன்பது ரயில் பெட்டித் தொடர் பிரேசில் நாட்டில் உள்ள “ஆல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட்’ மற்றும் “ஆல்ஸ்டாம் பிராஜக்ட்ஸ் இந்தியா லிமிடெட்’ என்ற நிறுவனத்தால், தயாரிக்கப்படுகிறது.

மீதம் உள்ள 33 ரயில் பெட்டித் தொடர்கள், ஆந்திர மாநிலம் தடா அருகில் உள்ள ஸ்ரீசிட்டி என்ற இடத்தில் துவக்கப்பட்ட அந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.மெட்ரோ ரயில் பணிமனை கோயம்பேடில் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பணிமனையில், நேற்று நான்கு பெட்டிகளைக் கொண்ட மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் துவக்க விழா நடந்தது. “விழா பகல் 2:00 மணிக்கு நடைபெறும்’ என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 1:40 மணிக்கே முதல்வர் ஜெயலலிதா வந்தார். அவரை, அமைச்சர் தங்கமணி, மெட்ரோ ரயில் மேலாண் இயக்குனர் ராஜாராமன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.பின், முதல்வரை மெட்ரோ ரயில் பெட்டிக்குள் அழைத்து சென்றனர். ரயிலின் சிறப்பம்சங்களை ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவன அதிகாரிகள் விளக்கினர்.

ரயில் பெட்டிகளை சுற்றி பார்த்துவிட்டு, முதல்வர் 1:45 மணிக்கு வெளியில் வந்தார். மெட்ரோ ரயிலுக்கு மின்சாரம் வழங்கும் 25 கி.வோ உயர் அழுத்த மின்சாரம் வழங்குவதற்கான பொத்தானை அழுத்தி துவக்கி வைத்தார். பின் அங்கிருந்த மேடையில் நின்றபடி கொடியசைத்து மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை துவக்கி வைத்தார்.

நான்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில், 800 மீட்டர் தூரம் ஓடி திரும்பி வந்தது. அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சோதனை ஓட்டம் 4,000 மணி நேரம் நடத்தப்படும். இரண்டாவது மற்றும் மூன்றாவது ரயில் பெட்டித் தொடர் அடுத்த மாதம் வந்து சேர உள்ளன. மீதம் உள்ள ஆறு ரயில் பெட்டித் தொடர் பகுதிகளாக மார்ச் மாதம் பிரேசில் நாட்டில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட உள்ளன.கோயம்பேடு முதல் மவுன்ட் வரையிலான முதல் பகுதியில் அடுத்த ஆண்டு மத்தியில் ரயில் சேவை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.