Home நாடு செல்லியல் செய்தி ‘தினக்குரல்’ பத்திரிக்கையில்!

செல்லியல் செய்தி ‘தினக்குரல்’ பத்திரிக்கையில்!

752
0
SHARE
Ad

Thinakural news 440 x 215பிப்ரவரி 15 – “செல்லியல்” தகவல் ஊடகத்தின் செய்திகளை அச்சில் வெளிவரும் மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கைகள் தொடர்ந்து மறு பிரசுரம் செய்து, ஆதரவு அளித்து வருகின்றன என்பதுடன், செல்லியல் ஊடாக வெளிவரும் தகவல்கள் மலேசியத் தமிழர்களுக்கு சென்றடைவதற்கும் பேருதவி புரிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில்  தமிழ்நாட்டில், கோவை நகரில் உள்ள டாக்டர் என்ஜிபி கல்லூரி நிகழ்வு ஒன்றில் மாணவர்களிடையே  செல்லியலின் தொழில் நுட்ப வடிவமைப்பாளரும், ஆலோசகருமான முத்து நெடுமாறனும், சிங்கையின் தமிழ் முரசு பத்திரிக்கையின் துணையாசிரியர் அழகிய பாண்டியனும் கலந்து கொண்டு உரையாற்றிய செய்தியை கடந்த சில தினங்களுக்கு முன்பாக செல்லியல் பிரசுரித்திருந்தது.

அந்த செய்தியை இன்றைய 15 பிப்ரவரி 2014 தேதியிட்ட பதிப்பில், 6ஆம் பக்கத்தில் தினக்குரல் தமிழ் நாளிதழ் மீண்டும் வெளியிட்டிருப்பதை இங்கே காணலாம்.