இதற்காக பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சோதனையில் இதுவரை இரண்டு கோடியே 16 லட்சத்து 47 ஆயிரத்து 750 ரூபாய் ரொக்கமாக பிடிக்கப்பட்டுள்ளது. அதோடு 47 லட்சத்து 18 ஆயிரத்து 660 ரூபாய் மதிப்புள்ள சேலைகள், நகைகள் மற்றும் பல்வேறு பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் படமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் அனைத்தும் கருவூலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.