Home கலை உலகம் அஜீத்-அனுஷ்கா காட்சிகளை ரகசியமாக படம் பிடிக்கும் கெளதம்மேனன்!

அஜீத்-அனுஷ்கா காட்சிகளை ரகசியமாக படம் பிடிக்கும் கெளதம்மேனன்!

708
0
SHARE
Ad

ajith-anushkaசென்னை, ஏப்ரல் 28 – கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 55-வது படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈசிஆர் சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில்தான் அஜீத்துடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்திருக்கிறார் அனுஷ்கா. ஆரம்பத்தில் மூன்று நாட்கள் மட்டுமே சண்டைக்காட்ச்சியில் நடித்த அஜீத், இப்போது அனுஷ்காவுடன் காதல் செய்யும் காட்சியில் நடிக்கிறார்.

ஆனால், அஜீத்-அனுஷ்கா இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்கும்போது, மொத்த படக்குழுவையும் வெளியேற்றி விட்டு, கேமராமேன் உள்பட வெகுசிலரை மட்டுமே வைத்து தனி அறைக்குள் படப்பிடிப்பு நடத்துகிறாராம் கெளதம்மேனன்.

#TamilSchoolmychoice

அப்படி படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு படக்குழு நபர்கள் யாருமே செல்ல அனுமதி கிடையாதாம். மேலும், அந்த காட்சிகள் படக்குழு மூலம் வெளியில் கசிந்து விடக்கூடாது என்பதற்காகவே இப்படி படமாக்கும் கெளதம்மேனன், தனது உதவி இயக்குனர்களிடம்கூட அந்த காட்சிகள் பற்றி இதுவரை சொல்லவில்லையாம்.

அவர்களும் சற்று தொலைவில் அமர்ந்திருக்கும் படக்குழுவோடுதான் அமர்ந்திருக்கிறார்களாம். அந்த வகையில், மொத்தம் 3 நாட்கள் அஜீத்-அனுஷ்கா இருவரையும் வைத்து ரகசிய படப்பிடிப்பு நடத்திய கெளதம்மேனன், படக்குழு நபர்களுக்கு வேலையே கொடுக்காதபோதும், அவர்கள் சம்பளத்தில் கைவைக்காமல் உரிய சம்பளத்தை கொடுக்க சொல்லிவிட்டாராம்.