Home உலகம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கிலானிக்கு கைது உத்தரவு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கிலானிக்கு கைது உத்தரவு!

446
0
SHARE
Ad

GIlani-AP-369x252_0இஸ்லாமாபாத், மே 30 – ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானி மற்றும் முன்னாள் அமைச்சர் ஃபாஹிமுக்கு உத்தரவாதத்தின் பேரில் வெளிவர முடியாத படி கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பித்து கராச்சி நீதிமன்றம் நேற்று ஆணையிட்டுள்ளது.

பாகிஸ்தானில் கிலானி பிரதமராக இருந்தபோது வர்த்தக வளர்ச்சி ஆணையத்தின் சரக்கு மானிய நிதியில் சுமார் 7 பில்லியன் அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவர் மீது கராச்சியில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள விசாரணை நிறுவனமான எஃப்ஐஏ நடத்திய விசாரணையில்,  கிலானி, முன்னாள் அமைச்சர் ஃபாஹிம் ஆகியோருக்கு ஊழலில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

#TamilSchoolmychoice

நீதிபதி முகமது அஜீமிடம்  எஃப்ஐஏ அதிகாரிகள், கிலானி மற்றும் ஃபாஹிம் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதன்பிறகு இருவருக்கும் நீதிமன்றத்தில் தோன்ற வேண்டும் என்பதற்கான அறிவிப்புகள் வழங்கப்பட்டது.  எனினும், இருவரும் நீதிமன்றத்தில் தோன்றாததால் நீதிபதி அவர்களுக்கு கைது உத்தரவு பிறப்பித்தார்.