Home உலகம் தலாய் லாமாவுடன் சீனா நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – அமெரிக்கா கோரிக்கை!

தலாய் லாமாவுடன் சீனா நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – அமெரிக்கா கோரிக்கை!

474
0
SHARE
Ad

thalailamaவாஷிங்டன், ஜூன் 9 – சீனா தனது தன்னாட்சி பிரதேசமான திபெத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் விதமாக அந்நாட்டின் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் கூறியதாவது:-

“சீனாவின் திபெத் பகுதியில் நிலவும் மனித உரிமைகளின் நிலை ஆழ்ந்த கவலையை அளிக்கிறது என்பதை நீண்டகாலமாக கூறி வருகிறோம். அந்தப் பகுதியில் பதற்றத்தை தணிக்கும் வகையில் தலாய் லாமா மற்றும் அவரது பிரதிநிதிகளுடன் சீன அரசு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.”

#TamilSchoolmychoice

“திபெத்தில் தனிப்பட்ட கலாசாரத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள சீனாவின் கொள்கைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். மேலும் திபெத் மற்றும் சீனாவில், திபெத்தியர்கள் வசிக்கும் பகுதியில் தூதரக அதிகாரிகள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறோம்” என்று மேரி ஹார்ஃப் கூறியுள்ளார்.

இதனிடையே, “திபெத்தின் நிலைமை குறித்து தலாய் லாமாவின் தூதரிடம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். ஆனால், அவர்கள் கேட்கும் தனிச் சுதந்திரமோ அல்லது பாதியளவு சுதந்திரமோ வழங்குவது பற்றி எத்தகைய பேச்சும் இருக்கக் கூடாது” என்று சீனா கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.