Home World Cup Soccer 2014 உலகக் கிண்ண காற்பந்து 2014: பிரேசிலில் இன்று கோலாகலமாகத் தொடங்குகின்றது!

உலகக் கிண்ண காற்பந்து 2014: பிரேசிலில் இன்று கோலாகலமாகத் தொடங்குகின்றது!

425
0
SHARE
Ad

சாவோ பாவ்லோ, ஜூன் 12 – உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் உலகக் கிண்ண காற்பந்து போட்டி 2014 இன்று வியாழக்கிழமை தொடங்குகின்றது.

பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள முதல் ஆட்டமான குழு ஏ பிரிவில், பிரேசில் – கொரேசியா அணிகள் மோதுகின்றன.

இதனிடையே, நேற்று சாவோ பாவ்லோ மைதானத்தில் அதற்கான அனைத்து பாதுகாப்பு ஒத்திகைகளும் மேற்கொள்ளப்பட்டன.

#TamilSchoolmychoice

இந்த ஒத்திகையில் 20-கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் நூற்றுக்கும் அதிகமான தீயணைப்புப் படை வீரர்களும் இந்த ஒத்திகை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

போட்டி நடைபெறும் போது பாதுகாப்பிற்காக சுமார் 6000 -த்திற்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் லட்சக்கணக்கான காவல்துறையினர் நகர் முழுவதும் வலம் வந்து தகுந்த பாதுகாப்பு பணிகளை செய்யவுள்ளனர் என ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்:

Fifa World Cup 2014 Feature

(மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இராணுவ வாகனத்தில் பாதுகாப்பிற்கு நிற்கும் வீரர்கள்)

Fifa World Cup 2014 Feature

(சாலையில் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பிற்கு நிற்கும் இராணுவ வீரர்)

Fifa World Cup 2014 Feature

(மைதானத்திற்குள் பாதுகாப்பிற்கு நிற்கும் இராணுவ வீரர்கள்)

இன்றைய ஆட்டம்:

பிரேசில் – கொரேசியா (குழு ஏ)

பிரேசில் நேரப்படி : 12 ஜூன், வியாழக்கிழமை (மாலை 5 மணி)

மலேசிய நேரப்படி: 13 ஜூன், வெள்ளிக்கிழமை (அதிகாலை 4 மணி)

Brazil training session

(பிரேசில் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்)

Croatia training

(கொரேசியா அணி வீரர்கள் உடற்பயிற்சி செய்கின்றனர்)

படங்கள்:EPA