Home உலகம் சிங்கப்பூர் கலவரம்: இந்தியருக்கு 5 மாத சிறை தண்டனை!

சிங்கப்பூர் கலவரம்: இந்தியருக்கு 5 மாத சிறை தண்டனை!

595
0
SHARE
Ad

singapore_riot_N2சிங்கப்பூர், ஜூன் 24 – கடந்த டிசம்பர் மாதம் சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் ஏற்பட்ட கலவரத்தில், காவல்துறையினரை செயலபட விடாமல் இடையூறு விளைவித்ததற்காக இந்திய நாட்டைச் சேர்ந்த மகாலிங்கம் தவமணி என்ற 27 வயது இளைஞருக்கு 5 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தவமணி மீது முதல் கலவரத்தில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதன் பின்னர் நடந்த விசாரணையில் துணை காவல்துறைக் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் என்பவரை செயல்படவிடாமல் தடுத்ததாக குற்றம் திருத்தியமைக்கப்பட்டு, தவமணிக்கு 5 மாத சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

இந்த குற்றத்திற்கு, அவ­ருக்கு எட்டு ஆண்­டு­கள் வரை­யி­லான சிறை­ தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

#TamilSchoolmychoice

சிங்கப்பூர் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 25 பேரில், குற்றத்தை மறுத்து வழக்கு விசாரணை கோரிய முதல் நபர் தவமணி ஆவார். அத்­து­டன், காவல்துறைக்கு இடையூறு விளை­வித்த குற்­றத்­திற்­காக முதன் முதலாக தண் டனை பெற்­ற­வ­ரும் இவர்­தான்.

இவ­ருக்­கான தண்டனைக் காலம் இவ்­வாண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதிக்கு பின், ­தேதி­யி­டப்­பட்­ட­தால் அவ­ருடைய தண்டனைக் காலம் நேற்றே நிறைவடைந்து காவ­லி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டார்.

சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 8 -ம் தேதி நடந்த பேருந்து விபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் இறந்தார்.

இதனால் அங்கு கலவரம் வெடித்து, அந்த பகுதியில் இருந்த 400-க்கும் மேற்பட்ட அந்நியத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதில் 43 அதிகாரிகள் காயமடைந்தனர். 24 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.