Home உலகம் பரிசோதனையில் சிக்காத வகையில் நவீன வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் அல்கொய்தா!  

பரிசோதனையில் சிக்காத வகையில் நவீன வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் அல்கொய்தா!  

436
0
SHARE
Ad

Paramilitary soldiers stand near bomb-making material which was seized by security forces in Quettaலண்டன், ஜூலை 4 – பரிசோதனையில் சிக்காத வகையில் அதிநவீன வெடிகுண்டுகளை சிரியாவின் அல்கொய்தா ஆதரவு நுஸ்ரா முன்னணி தீவிரவாத அமைப்பும், ஏமன் அல்கொய்தா தீவிரவாதிகளும் சேர்ந்து உருவாக்கி வருவதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளை குறி வைத்து தொடர் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ள அல்கொய்த, பல்வேறு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுடன் சேர்ந்து சர்வதேச விமானங்களை தகர்க்கும் நோக்கத்துடன் பல அதிநவீன வெடிகுண்டுகளை உருவாக்கி வருவதாக அமெரிக்க உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

iraqஇது தொடர்பான தகவல்களால் விழிப்பு அடைந்துள்ள அமெரிக்கா, தனது நட்பு நாடான இங்கிலாந்தையும் எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் முக்கிய விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

குறிப்பாக உலகின் 3-வது பரபரப்பான விமான நிலையமான ஹீத்ரு விமான நிலையத்தில் அதிநவீன ஆயுதங்களைக் கொண்ட பாதுகாப்புப் படையினர் கடும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.