Home உலகம் ஒசாமா பின்லாடனின் உடல் அடக்கம் பற்றி தகவல்கள் அம்பலம்!

ஒசாமா பின்லாடனின் உடல் அடக்கம் பற்றி தகவல்கள் அம்பலம்!

396
0
SHARE
Ad

binladen-3வாஷிங்டன், அக்டோபர் 8 – அமெரிக்காவை அதிரவைத்த அல் கொய்தா இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லாடனின் உடல், 300 பவுண்ட் இரும்புச் சங்கிலியுடன் கூடிய பையில் வைக்கப்பட்டு நடுக்கடலில் வீசப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை(CIA)-ன் முன்னாள் இயக்குனர் லியோன் பனெட்டா, தான் எழுதி ‘வொர்தி ஃபைட்ஸ்: எ மெமோய்ர் ஆப் லீடர்ஷிப் இன் வார் அன்ட் பீஸ்’ (Worthy Fights: A Memoir of Leadership in War and Peace) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

“கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி, அமெரிக்க சிறப்பு இராணுவப் படை அபோதாபாத்தில் பதுங்கி இருந்த ஒசாமா பின்லாடனை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. இதில் பின்லாடன் உயிரிழந்தார். அவரது உடலை இஸ்லாம் முறைப்படி அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.”

#TamilSchoolmychoice

“அதனால் அவரது உடல் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு, அரபிய மொழியில் இறுதிப் பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்னர், அது ஒரு கருப்பு நிறப் பையில், 300 பவுண்ட் எடையுள்ள இரும்பு சங்கிலியுடன் சேர்த்து வைக்கப்பட்டு நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.