Home உலகம் போக்கோ ஹரம் அமைப்பினருடன் நைஜீரிய அரசு சமாதானம்: மாணவிகள் மீட்கப்பட வாய்ப்பு!

போக்கோ ஹரம் அமைப்பினருடன் நைஜீரிய அரசு சமாதானம்: மாணவிகள் மீட்கப்பட வாய்ப்பு!

617
0
SHARE
Ad

timthumbஅபுஜா, அக்டோபர் 18 – நைஜீரியாவில் செயல்பட்டு வரும் போக்கோ ஹரம் தீவிரவாத அமைப்பினருடன் அந்நாட்டு அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளதால், கடந்த ஏப்ரல் மாதம் அவர்களால் கடத்தப்பட்ட 276 பள்ளி மாணவிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

நைஜீரியாவில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த, ஆயுதப் போராட்டம் நடத்தி வரும், போக்கோ ஹரம் தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் மாதம் 14–ம் தேதி, போர்னோ மாகாணத்தில் உள்ள ஒரு உறைவிடப் பள்ளியில், கல்வி பயின்று வந்த 276 மாணவிகளைப் பிணைக் கைதிகளாக கடத்திச் சென்றனர்.

உலக நாடுகளை இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நைஜீரிய இராணுவத்தால் அவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில்,  அவர்களை மீட்க அமெரிக்கா, தனது இராணுவத்தை அனுப்பியது. எனினும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

#TamilSchoolmychoice

kidnapஇந்நிலையில், போக்கோஹரம் தீவிரவாதிகளுடன் அந்நாட்டு அரசு போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அதன் மூலம் கடத்தப்பட்ட 276 மாணவிகளும் பத்திரமாக மீட்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் குட்லக் ஜொனாத்தனின் முதன்மை செயலாளர் ஹசன் டுக்கூர் தெரிவித்துள்ளார்.

இதனை உறுதிபடுத்தும் வகையில், இராணுவத்தினரின் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த  தாக்குதல்கள்  குறைக்கப்படும்  என  போக்கோ ஹரம் தீவிரவாதிகள் உறுதியளித்துள்ளனர்.